சகிப்பதேன் சகியே..?!
சகிப்பதேன் சகியே...?! "வலிமையான கேள்விகள் பொருத்தமான தேவையான பதில் கிடைக்கும் வரை ஓய்வதில்லை " - ஈரோடு கதிரின் வரிகள் இவை. எனக்குள்ளும் அப்படி ஒரு கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. நெருங்கிய வட்டத்தில் நடந்திருந்த ஒரு சம்பவத்தால் அக் கேள்வி விஸ்வரூபமெடுததிருந்தது. இன்றைய இளம் பெண்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அசால்ட்டாக சிக்கலான சூழல்களைக் கையாளும் திறனும் பார்க்கும் பொழுது பல சமயங்களில் பெருமையாகவும் சில சமயங்களில் பொறாமையாகவும்(!) கூட உணர்வதுண்டு. ஆனால் "பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல்"என்ற விஷயத்தால் இன்று பாதிக்கப் படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று வாசிக்கும் பொழுது மனதில் ஒரு விதமான பாரம் கூடுவதைத் தவிர்க்க இயலவில்லை. "இதெல்லாம் சகஜமப்பா" என்று சாதாரணமாகக் கடக்க முடியாத கடக்கக் கூடாத ஒரு நிகழ்வல்லவா இது. "பெண்களின் பெயரை விட நீளமான பட்டங்களும் நான்கு இலக்க ஐந்து இலக்கங்களில் வாங்கும் கனவுச் சம்பளமும் அ...