Posts

Showing posts from July, 2020

தூரி நோம்பி

தூரி நோம்பி   இன்றைய நாட்களின் வெறுமையில் சிறுவயது நினைவுகள் வண்ணங்களை நிரப்பும் போதெல்லாம், மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பது தூரி நோம்பி/ ஆடி நோம்பி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஆடி 18 தான். ஆடி நோம்பி, தை நோம்பி, தேர் நோம்பி எல்லாம் கொங்கு விவசாயக் குடும்பங்களில் உள்ள  சிறுசுகளின் மனசில்  குதூகலத்தை விதைக்கும் பண்டிகைகள். நோம்பி அப்படின்னா  கொங்கு அகராதியில் பண்டிகை . தூரி நோம்பி மனசுக்கு பிடிக்க முதல் காரணம் பெரிய லீவு முடிஞ்சு  ஹாஸ்டலுக்குப் போனதுக்கப்புறம் வீட்டுக்கு வர்றதுக்கு கெடைக்கிற முதல் விடுமுறை !!  மூணு நாள் லீவுங்கறது அவ்வளவு பெரிய சந்தோஷம்!!  அடுத்தது ஆடி நோம்பிக்கு கண்டிப்பா புதுத் துணி உண்டு. ஃப்ராக்,கௌன், ஸ்கர்ட்  மாதிரி குட்டித்துணி எல்லாம் அஞ்சாறு வயசு வரைக்கும் தான்.மேலிருந்து  முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே வரைக்கும்  இருக்கும்   பாடிபாவாடையும் இடுப்பு வரை இருக்கும் நீள ஜாக்கெட்டும் ஏழெட்டு வயசு வரைக்கும் போடுவாங்க.  தரைகூட்டற அளவுக்கு கால் வழிய பாவாடையும் கை வைத்த நீள மேல்சட்டையும்  ஒரு பண்ண...

எறும்புக் குழியும் எழுத்தறிவும்

          "ஏன் வாசிக்க வேண்டும்"-சமீபத்தில்  ஒரு  தோழியின் கேள்வி. "ஏன் சுவாசிக்க வேண்டும்?" என்ற என் மனதில் எழுந்த கேள்வியே பதிலாய் அமைந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிக்கும் போது தொடங்குகிறது நம் ஒவ்வொருவரின் வாசிப்புப் பயணமும். அதில் எவ்வளவு தூரம்தொடர்ந்து விருப்பத்துடன்  பயணிக்கிறோம் என்பது அவரவர் தேர்வு. வீட்டுப் பெரியவர்களிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கம் இயல்பாக வர நிறைய வாய்ப்புள்ளது.எனக்கும் அப்படியே தான்.  பொதுவாக கொங்குப் பகுதிகளில் விவசாயக் குடும்பங்களில் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஆண்குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப் பட்டனர். சமையல் செய்வதும்  மீதி நேரத்தில் காடு கரை ஆடு மாடுன்னு விவசாய வேலைகள் செய்வதும் மேற்பார்வையிடுவதும்  தான் பெண்களின் வேலை. பெரிய விவசாயக் குடும்பங்களிலும் இதே நிலை தான். ஓய்வு நேரம் ஒன்று இருப்பதும் அப்போது அவர்களுக்குப் படிக்கத் தெரிவதும் அவர்கள் புத்தகம் படிப்பதும் அரிய காட்சிகள்.எங்காவது ஓரிரண்டு முற்போக்குச் சிந்தனை உள்ள தந்தையை வரமாய்ப் பெற்றவர்களுக்கே அது சாத...